அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு : உக்ரைனுக்குள் சரிமாரியாக ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா!

ரஷ்யா நான்கு ஏவுகணைகள் மற்றும் 136 ட்ரோன்களை உக்ரைனுக்குள் ஏவியதாக அந்நாட்டின் விமானப்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா கூடுதல் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தாக்குதலின் போது 108 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன அல்லது வேறுவிதமாக செயலிழக்கச் செய்யப்பட்டன என்றும், 28 ட்ரோன்கள் 10 இடங்களில் தாக்கப்பட்டன என்றும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அதிநவீன இராணுவ உபகரணங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கினாலும் அவற்றி பராமரிப்பு செலவை 100 சதவீதம் உக்ரைன் ஏற்கும் என ட்ரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)