இலங்கை

இலங்கையில் எரிபொருளை குறைந்த விலையில் விற்பனை செய்யுமாறு வலியுறுத்தல்!

இலங்கையில் எரிபொருள் சந்தைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள சினோபெக் நிறுவனம், குறைந்த விலையில் எரிபொருளை வெளியிடுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் அந்த கோரிக்கைக்கு எண்ணெய் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை. சினோபெக் அனைத்து வகையான எரிபொருட்களையும் எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் விலையை விட லிட்டருக்கு மூன்று ரூபாய் மலிவாக விற்பனை செய்ய கோரியுள்ளது.

சினோபெக்கிற்கு ஏற்கனவே 130 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இருபது எரிபொருள் நிலையங்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கூட நிறுவனம் தனது முதலாவது எரிபொருளை இலங்கைக்கு கொண்டு வந்து சேமித்து வைத்துள்ளதுடன் இன்னும் சில தினங்களில் தமது எரிபொருளை விற்பனை செய்ய ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!