இலங்கை செய்தி

இலங்கையில் சீரற்ற காலநிலை – ஜனாதிபதி விடுத்த பணிப்புரை

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய நிலவரப்படி, அனர்த்தங்களினால் 08 மரணங்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடுகளை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, உயிரிழந்த ஒருவருக்கு அனர்த்த நிவாரண சேவை நிலையம் 250,000 ரூபா நட்டஈடு வழங்கவுள்ளதாகவும், முற்பணமாக 25,000 ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

(Visited 35 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை