இலங்கையில் 16 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை – 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!
நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 16 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5, 361 குடும்பங்களைச் சேர்ந்த 21, 778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 591 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று முற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது. எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
(Visited 3 times, 3 visits today)





