அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல் – 3 கோடி பேருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவும், பனிப்புயலும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வடக்கு புளோரிடா, கரோலினா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில், 3 கோடி பேருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு புளோரிடாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாடசாலை, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
குளிரில் இருந்து தப்பிக்க, அரசு சார்பில் குளிர்காயும் உஷ்ண மையங்களை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(Visited 31 times, 1 visits today)