ஐரோப்பா

பிரான்ஸில் வரலாறு காணாத வெள்ளம் : மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் 2300 பேர்!

பிரான்ஸ் கடந்த 40 ஆண்டுகளில் மோசமான வெள்ளப் பெருக்கை கண்டுள்ளது. இந்நிலையில் 2300 பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 1000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக மைக்கேல் பார்னியர் அறிவித்துள்ளார்.

பிரெஞ்சு வானிலை நிறுவனம் Meteo France, Ardeche மற்றும் Lozere பகுதிகளில் உள்ள சில உள்ளூர் பகுதிகளில் 48 மணி நேரத்தில் 700 மில்லிமீட்டர் (27.5 அங்குலம்) மழை பெய்துள்ளதாக அறிவித்துள்ளது.

தேசிய இரயில்வே ஆபரேட்டர் SNCF Lyon மற்றும் Saint-Étienne நகரங்களுக்கு இடையே ரயில் சேவைகள் இயக்கப்படாது எனக் கூறியுள்ளார்.

இரு நகரங்களுக்கு இடையேயான ஒரு முக்கிய நெடுஞ்சாலையும் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!