ஆசியா

திருமணம் செய்யாதவர்கள் பணிநீக்கம் – சீன நிறுவனத்தின் உத்தரவால் சர்ச்சை

சீன நிறுவனம் ஒன்றில் இருந்து ஒற்றையர்கள், விவாகரத்துப் பெற்ற ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர் என அதன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தை அதிகாரிகள் குறைகூறியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து நிறுவனம் அந்தக் கொள்கையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

The Shuntian Chemical Group எனப்படும் குறித்த நிறுவனம் தென் சீனாவில் உள்ள ஷண்டோங் மாநிலத்தில் அமைந்துள்ளது. 1,200க்கும் அதிகமான ஊழியர்கள் அங்கு வேலை செய்கின்றனர்.

நிறுவனத்தின் திருமண விகிதத்தை அதிகரிக்க அது புதிய கொள்கையை கடந்த மாதம் அறிவித்தது.

அந்தக் கொள்கையின்படி, 28 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்ட ஊழியர்கள் செப்டம்பர் மாதத்திற்குள் திருமணம் செய்து குடித்தனத்தைத் தொடக்கியிருக்க வேண்டும்.

அடுத்த மாதத்திற்குள் அது தொடர்பான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் தங்களைக் குறை சொல்லும் கடிதத்தை எழுதவேண்டும். ஜூன் இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் நிறுவனம் அவர்களை மதிப்பிடும்.

செப்டம்பர் இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்