திருமணம் செய்யாதவர்கள் பணிநீக்கம் – சீன நிறுவனத்தின் உத்தரவால் சர்ச்சை

சீன நிறுவனம் ஒன்றில் இருந்து ஒற்றையர்கள், விவாகரத்துப் பெற்ற ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர் என அதன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தை அதிகாரிகள் குறைகூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து நிறுவனம் அந்தக் கொள்கையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
The Shuntian Chemical Group எனப்படும் குறித்த நிறுவனம் தென் சீனாவில் உள்ள ஷண்டோங் மாநிலத்தில் அமைந்துள்ளது. 1,200க்கும் அதிகமான ஊழியர்கள் அங்கு வேலை செய்கின்றனர்.
நிறுவனத்தின் திருமண விகிதத்தை அதிகரிக்க அது புதிய கொள்கையை கடந்த மாதம் அறிவித்தது.
அந்தக் கொள்கையின்படி, 28 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்ட ஊழியர்கள் செப்டம்பர் மாதத்திற்குள் திருமணம் செய்து குடித்தனத்தைத் தொடக்கியிருக்க வேண்டும்.
அடுத்த மாதத்திற்குள் அது தொடர்பான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் தங்களைக் குறை சொல்லும் கடிதத்தை எழுதவேண்டும். ஜூன் இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் நிறுவனம் அவர்களை மதிப்பிடும்.
செப்டம்பர் இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.