உலகம் செய்தி

Meningitis குறித்து எச்சரிக்கை: Kent பல்கலை மாணவன் உட்பட இருவர் பலி!

கென்ட் Kent பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட இரு இளைஞர்கள் மெனிஞ்சைடிஸ் (Meningitis) எனப்படும் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சிலர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

குறித்த நோய்த்தொற்று கேன்டர்பரி பகுதியில் பரவி வருவதால், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நோய் பரவலைக் கட்டுப்படுத்த பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு முகமை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் இணைந்து சுமார் 30 ஆயிரம் பேருக்கு இது குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

காய்ச்சல், தலைவலி மற்றும் உடலில் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமாக வாழும் இடங்களில் இந்த பாக்டீரியா விரைவாகப் பரவக்கூடும் என்பதால், அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!