இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் சீரற்ற காலநிலை – உயர்தரப் பரீட்சை திகதியில் மீண்டும் மாற்றம்

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சை திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தலைமையில் சற்று முன்னர் இடம்பெற்றது.

அதன்படி, 03 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மோசமான காலநிலை காரணமாக மேலும் 03 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறாது என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 6 நாட்கள் விடுமுறைக்கு பின்னர், உயர்தரப் பரீட்சை டிசம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!