இலங்கை

இலங்கையில நிலவும் சீரற்ற வானிலை : நாடு முழுவதும் 11 ஆயிரம் பேர் பாதிப்பு!

நிலவும் மோசமான காலநிலை காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எட்டாயிரம் பேர் உட்பட நாடு  முழுவதும் கிட்டத்தட்ட 11 ஆயிரம்  பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பாடசாலைகளும் கிளிநொச்சியில் 5 பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 5000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட வீரர்கள் தற்காலிக தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!