இலங்கை

இனி ஐநா அதிகாரிகளுக்கு விசா கிடையாது; இஸ்ரேல் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

ஹமாஸுக்கு எதிரான போரில், இஸ்ரேல் மீது ஐநா சபை குற்றம்சாட்டியிருந்த நிலையில் இனி ஐநா அதிகாரிகளுக்கு விசா வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர், நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் அங்கு குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக பேசி இருந்த ஐநா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டேரஸ், ஹமாஸ் மீதான பதிலடி என்ற பெயரில், பாலஸ்தீனிய மக்கள் மீது ஒட்டுமொத்தமாக தாக்குதல் நடத்துவது சரியானது அல்ல என தெரிவித்திருந்தார். சாமானிய மக்களை கொல்வதும், காயப்படுத்துவதும், கடத்தி செல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

Mission & History - UN Watch

இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் கருத்து தெரிவித்துள்ள ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலார்ட் எர்டென், குட்டேரஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் ஐநாவிற்கு பாடம் புகட்டும் வகையில் இனி ஐநா அதிகாரிகளுக்கு இஸ்ரேல் விசா வழங்காது எனவும் அவர் அதிரடியாக அறிவித்தார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!