உலகம் செய்தி

இம்ரான் கானின் தடுப்புக்காவல் குறித்து பாகிஸ்தானை எச்சரித்த ஐ.நா நிபுணர்

அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் இம்ரான் கானின் தடுப்புக்காவல் நிலைமைகள் குறித்து ஐ.நா. நிபுணர் ஒருவர் பாகிஸ்தானை(Pakistan) எச்சரித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்(Imran Khan) தடுப்புக்காவல் நிலைமைகளை அவசரமாக மேம்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர் ஒருவர் பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளார்.

சிறையில் அவர் சித்திரவதை அல்லது பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான தண்டனைக்கு உட்படுத்தப்படுவதற்கு ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஆலிஸ் ஜில் எட்வர்ட்ஸ்(Alice Jill Edwards) கவலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆலிஸ் ஜில் எட்வர்ட்ஸ், கானின் தடுப்புக்காவல் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், கான் நீண்டகால தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், வெளி உலகத்தை அணுகுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு 23 மணிநேரம் வரை அவரது அறையில் தனியாகச் செலவிடுவதாகவும் நம்பகமான தகவல் தனக்குக் கிடைத்ததாக எட்வர்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!