இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வரவேற்ற ஐ.நா தலைவர்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதால் மோதலைத் தணிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றார்.
“நாங்கள் கண்காணித்து வருகிறோம், ஆனால் மோதலைத் தணிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்,” என்று பொதுச் செயலாளர் நாயகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.
முன்னதாக, வாஷிங்டனின் மத்தியஸ்தத்தில் “நீண்ட இரவு” பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் “முழுமையான மற்றும் உடனடி” போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
(Visited 1 times, 1 visits today)