சர்ச்சைக்குரிய மசோதாவில் கையெழுத்திட்ட உக்ரைன் ஜனாதிபதி – நாடு முழுவதும் எதிர்பு அலை!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி செவ்வாயன்று ஒரு சர்ச்சைக்குரிய மசோதாவில் கையெழுத்திட்ட பிறகு நாடு முழுவதும் எதிர்ப்புகளை எதிர்கொள்கிறார்.
இது இரண்டு முக்கிய ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் சுதந்திரத்தை நடுநிலையாக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உக்ரைனிய மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் துருக்கியின் இஸ்தான்புல்லில் ஒரு புதிய சுற்று போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காகச் சந்திக்கத் தயாராகி வரும் நிலையில், இது வந்துள்ளது.
செவ்வாயன்று, ஊழல் எதிர்ப்புப் பணியகம் (NABU) மற்றும் அதன் கூட்டாளி அமைப்பான சிறப்பு ஊழல் எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் (SAPO) ஆகியவற்றை வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகத்தின் (PGO) நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தில் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டார்.
2014 ஆம் ஆண்டு உக்ரைனின் மேற்கத்திய சார்பு மைதான் புரட்சிக்குப் பின்னர், முறையான ஊழலை வேரறுக்கவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதைக் கருத்தில் கொண்டு கியேவ் அதன் ஜனநாயக அமைப்பை சீர்திருத்த உதவும் நோக்கத்துடன் இரண்டு அமைப்புகளும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.