ஐரோப்பா

மொஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய அதிர்ச்சி தாக்குதல் – மூடப்பட்ட விமான நிலையங்கள்

மொஸ்கோவை குறிவைத்து உக்ரைன் தொடர்ந்து இரண்டாவது இரவாக ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மொஸ்கோவின் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வெவ்வேறு திசைகளில் இருந்து வந்த 19 உக்ரேனிய ட்ரோன்கள், நகரத்தை அடைவதற்கு முன்பே அழிக்கப்பட்டதாக மொஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.

நகரத்திற்குள் நுழையும் ஒரு பிரதான நெடுஞ்சாலையில் அவற்றின் சில இடிபாடுகள் விழுந்ததாகவும், ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் மேயர் கூறினார்.

இருப்பினும், இந்த விஷயத்தில் உக்ரைன் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், ஒரே இரவில் 26 உக்ரேனிய ட்ரோன்களை அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(Visited 33 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்