ஐரோப்பா

மூன்றாம் உலகப் போரை தோற்றுவிக்கும் உக்ரைன் – ரஷ்ய போர் : களமிறங்கும் வடகொரியா!

ரஷ்ய பசிபிக் கடற்படையின் ஏழு கப்பல்கள் வட கொரியாவில் உள்ள சோங்ஜின், ஹம்ஹங் மற்றும் முசுடான் ஆகிய இடங்களில் இருந்து ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகருக்குச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பலில் 1,500 வடகொரிய சிறப்புப் படை வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் 11,000 வட கொரிய துருப்புக்களைக் கொண்ட ஆரம்பப் படையின் முன்னணிப் படையாகும்.

இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் பரந்த போரை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. அத்துடன் இந்த போரானது தனிப்பட்ட ரீதியில் இரு நாடுகள் சார்ந்ததாக மாத்திரம் இல்லாமல் ஏனைய நாடுகளையும் உள்ளடங்கிய போராக உருவெடுக்கிறது என்பதையும் பிரதிபலிக்கிறது.

பீரங்கி வெடிபொருட்கள், KN-23 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தொட்டி எதிர்ப்பு ஏவுகணை வாகனங்களையும் வடகொரியா ரஷ்யாவிற்கு விற்பனை செய்துள்ளது. ஈரானுடன், வட கொரியா ரஷ்யாவின் தொழில்துறை ஆதரவாளராக உள்ளது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் ஒரு புறம் இருக்க மறுபுறம் உக்ரைன்- ரஷ்யா போர் இவர்களோடு கூட்டுச் சேரும் நட்பு நாடுகள் என ஒரு பரந்த அளவிலான மோதல் கட்டவிழ்த்து விடப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளன. இவை மூன்றாம் உலகப் போராக வலுவடைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

(Visited 35 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!