ஐரோப்பா

ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பகுதியை குறிவைத்து மிகப்பெரிய தாக்குதல் நடத்திய உக்ரேன்

ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பகுதியைக் குறிவைத்து உக்ரேன் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியதாக அப்பகுதியின் ஆளுநர் இகோர் ஆர்ட்டமோனோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்குள் உக்ரேன் ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதாகவும் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாகவும் மின்சாரத் தடை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யா விமானப் படை முகாமுக்கு அருகில் இருக்கும் நான்கு கிராமங்களிலிருந்து கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

லிபெட்ஸ்க் மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறினார்.

(Visited 20 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்