ஐரோப்பா

ரஷ்ய தேர்தலை சீர்குலைக்க உக்ரேன் முயற்சி

ரஷ்யத் தேர்தலைச் சீர்குலைக்க உக்ரேன் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மொஸ்கோ குற்றஞ்சாட்டியுள்ளது.

உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் மூன்று நாள்களாக நடைபெறும் வாக்களிப்பு இன்று நிறைவுபெறும்.

ரஷ்யாவின் எல்லையில் உள்ள Belgorod நகரில் உக்ரேன் நடத்திய தாக்குதல் காரணமாக அங்குள்ள பள்ளிக்கூடமும், கடைத்தொகுதிகளும் மூடப்பட்டன.

சமரா வட்டாரத்தில் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலையின் மீதும் உக்ரேன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) தேர்தலைச் சீர்குலைக்க உக்ரேன் முயல்வதாகக் கூறினார்.

ரஷ்யத் தேர்தலில் மக்கள் பெரிய அளவில் வாக்களிப்பதாகக் கூறப்படுகிறது. 2 நாள்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர்.

ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட உக்ரேனிய வட்டாரங்களிலும் தேர்தல் நடக்கிறது. அங்கு சுமார் 70 விழுக்காட்டினர் வாக்களித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

புட்டின் வெற்றிபெற்றால் மேலும் 6 ஆண்டுக்காலம் அவர் பதவியில் இருப்பார். சோவியத் யூனியன் தலைவர் ஸ்டாலினைவிட அதிகக் காலம் ஆட்சியில் இருந்த அதிபராக அவர் விளங்குவார்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!