ஐந்து போர்க் கைதிகளை ரஷ்யப் படைகள் தூக்கிலிட்டதாக உக்ரைன் குற்றச்சாட்டு

கடந்த மாதம் கிழக்கு உக்ரைனில் நடந்த ஒரு சம்பவத்தின் போது ரஷ்யப் படைகள் ஐந்து உக்ரேனிய போர்க் கைதிகளை தூக்கிலிட்டதாக உக்ரைன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 2 ஆம் திகதி கிழக்கு நகரமான வுஹ்லேடருக்கு அருகில் ஆயுதம் ஏந்தாத ஐந்து வீரர்களை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றிய பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரஷ்யா உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் போர்க்குற்றம் செய்யவில்லை என்று முன்னர் மறுத்துள்ளது.
(Visited 24 times, 1 visits today)