சவுதி பாலைவனத்தில் பிரித்தானிய வான் பாதுகாப்புப் படை – யெவெட் கூப்பர் பார்வை
சவுதி அரேபியாவின் பாலைவனப் பகுதியில் இயங்கி வரும் பிரித்தானிய இராணுவத்தின் வான் பாதுகாப்புப் பிரிவை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் பார்வையிட்டுள்ளார்.
ரோயல் பீரங்கிப் படையிலிருந்து வீரர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டிருப்பது, சவுதி அரேபியா மற்றும் அதன் வளைகுடா அரபு அண்டை நாடுகளுக்கான பிரித்தானியாவின் தொடர்ச்சியான பாதுகாப்பு உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும் என்று அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
“ஆபரேஷன் கிராஸ்வேஸ்” என்ற குறியீட்டு பெயரில் இந்த படையெடுப்பு 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது ஈரான் தனது அரபு அண்டை நாடுகளுக்கு எதிராக ட்ரோன்கள், கப்பல்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தினசரி தாக்குதல்களை மேற்கொள்வதால் இந்த நடவடிக்கை மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஈரான் பெரும்பாலும் பிரித்தானியா படைகளை விட அந்தப் பகுதியில் உள்ள அமெரிக்கப் படைகளையே இலக்குவைத்து வருவதாக ரியாத்திற்கான பிரித்தானிய பாதுகாப்பு இணைப்பாளரான பிரிகேடியர் பென் வைல்ட் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஈரான் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளையும் தொடர்ந்து தாக்குவதற்கு முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.





