ஐரோப்பா

இங்கிலாந்தின் பிரதி பிரதமர் டொமினிக் ராப் பதவி விலகினார்!

பிரிட்டனின் பிரதி பிரதமர் டொமினிக் ராப்  பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொமினிக் ராப் துன்புறுத்தல்கள் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டார் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து இடம்பெற்ற விசாரணைகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அடம்டொலி மேற்கொண்ட விசாரணை அறிக்கையை தொடர்ந்து நான் பதவி விலகுகின்றேன் என தெரிவித்துள்ள அவர் நானே விசாரணைகளிற்கு அழைப்பு விடுத்தேன் விசாரணை முடிவுகளை அடிப்படையாக வைத்து இராஜினாமா செய்ய தயார் என அறிவித்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் எனது வார்த்தைகளை காப்பாற்ற விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொமினின் ராப் தனது அனைத்து திணைக்களங்களிலும் அச்ச கலாச்சாரத்தை உருவாக்கினார் என அவரின் பணியாளர் ஒருவர் நவம்பரில் குற்றம்சாட்டியிருந்தார்.

அந்த குற்றச்சாட்டை நிராகரித்து டொமினிக் ரப் இந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை கோரியிருந்தார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!