23 நாட்களுக்கு பிறகு மீண்டும் வந்தாள் “உடரட்ட மெனிக்கே”!
டித்வா புயலையடுத்து 23 நாட்களாக தடைபட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவை இன்று மீள ஆரம்பமானது.
பதுளை மற்றும் அம்பேவளைக்கு இடையிலான ரயில் பாதையே பயணத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் மலையக ரயில் பாதைகளும் கடுமையாக சேதமடைந்தன.
அவற்றை புனரமைப்பதற்குரிய பணிகள் இடம்பெற்றுவருகின்றன. முதற்கட்டமாக பதுளை மற்றும் அம்பேவளைக்கு இடையிலான ரயில் பாதை புனரமைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சர்வமத வழிபாட்டுடன் “உடரட்ட மெனிக்கே” ரயில் பதுளையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மலையக ரயில் சேவை முக்கிய பங்கை வகிக்கின்றது. எனவே, ஏனைய பகுதிகளும் விரைவில் சீரமைக்கப்படவுள்ளது.





