செய்தி மத்திய கிழக்கு

ஐக்கிய அரபு எமிரேட் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிகளைச் செய்ய அனுமதி

பாதகமான காலநிலை மாற்றங்கள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஊழியர்கள் இன்று (16) முதல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அனைத்து அரசு ஊழியர்களும் பணியிடத்தில் உடல் ரீதியாக இருக்க வேண்டிய பதவிகளைத் தவிர, வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்துள்ளது.

நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிப்புற வேலைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்கும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!