மத்திய கிழக்கு போரில் தவறான தகவல்களை வெளியிட்ட 100க்கும் மேற்பட்டோர் அபுதாபியில் கைது
மத்திய கிழக்கு போரின் போது தவறான தகவல்களை படம்பிடித்து வெளியிட்டதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி காவல்துறை 109 பேரைக் கைது செய்துள்ளது.
அபுதாபி காவல்துறை வெள்ளிக்கிழமை X தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களின் கருத்தைத் தூண்டவும், சமூகத்தினரிடையே வதந்திகளைப் பரப்பவும் வாய்ப்பு உள்ளது எனவும்
காவல்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய போரின் போது தவறான தகவல்கள் அதிகரித்ததால், வளைகுடா முழுவதும் இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.




