ஆசியா

ஜப்பானில் தொடரும் சூறாவளி அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

ஜப்பானின் தென் மேற்கு வட்டாரத்தில் Shanshan சூறாவளி அபாயம் தொடர்வதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

சூறாவளி வெப்ப மண்டலப் புயலாய் வலுவிழந்திருக்கிறது. இருப்பினும் மழையும், பலத்த காற்றும் ஓயவில்லை. 6 பேர் உயிரிழந்த நிலையில் 80 பேர் காயமடைந்தனர்.

சுமார் 250,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான வீடுகளுக்கு மீண்டும் மின்சாரம் கிடைத்து விட்டது.

ஜப்பானில் ரயில், விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. பயணிகள் நிலையங்களில் காத்திருக்க நேர்ந்தது. புயல் கிழக்கே தலைநகர் தோக்கியோ நோக்கி மெதுவாக நகர்கிறது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!