இலங்கையில் யுவதிகள் இருவர் நீரில் மூழ்கி பலி

இலங்கையில் விடுமுறைக்காக உறவினரின் வீடொன்றுக்கு சென்ற யுவதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மீரிகம மற்றும் ரத்னபுர பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவரும் 15 வயது சிறுமி ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (13) மதியம் கல்கமுவ பகுதியில் உள்ள பாழுகடவல எனும் ஏரியில் குளிக்கும் வேளையிலேயே இருவரும் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களின் சடலங்கள் தற்போது கல்கமுவ அடிப்படை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
(Visited 2 times, 2 visits today)