தென் ஆப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் மரணம்

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் (Johannesburg) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் ஒரு கும்பல் வன்முறையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“பாதிக்கப்பட்ட இளைஞர்களை நான்கு சந்தேக நபர்கள் நடந்து வந்து அணுகினர், அவர்களில் மூன்று பேர் துப்பாக்கிகளுடன் இருந்தனர். சந்தேக நபர்கள் எதுவும் பேசாமல் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்,” என்று காவல்துறை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் 13 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக கொலை விகிதங்களை கொண்ட நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று, இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு 60 பேர் கொலை செய்யப்படுகிறார்கள்.