விளையாட்டு

இரண்டு வாரம் போட்டித்தடை – பகிரங்கமாக மன்னிப்பு கோரிய மெஸ்ஸி

PSG கழகத்தின் வீரர் மெஸ்ஸி காணொளி ஒன்றின் மூலம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மெஸ்ஸி தனது குடும்பத்தினருடன் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், இரண்டு வாரங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

வியாபார நோக்கில் அனுமதி பெறப்படாமல் மேற்கொண்டிருந்த இந்த பயணத்தை அடுத்து மெஸ்ஸிக்கு இரண்டு வாரம் போட்டித்தடை விதித்தது PSG கழகம்.

இந்நிலையில், இன்று ஒரு காணொளி ஒன்றின் மூலம் அவர் மன்னிப்புக்கோரியுள்ளார்.

“போட்டியின் பின்னர் ஒருநாள் சுதந்திரமாக நான் சுற்றுலாப்பயணத்தை மேற்கொள்ளலாம் என எண்ணியிருந்தேன்.

என்னால் அதை இரத்துச் செய்ய முடியவில்லை. எனது அணி வீரர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். கழகம் எடுக்கப்போகும் முடிவுக்காக காத்திருக்கிறேன்.” என தனது காணொளியில் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.

(Visited 12 times, 1 visits today)
See also  பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content