ஆசியா

இந்தோனேசியாவில் இரு ரயில்கள் மோதி விபத்து : மூவர் பலி!

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் இன்று (05.01) இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்ததாக  தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்ததாக தேசிய ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் அயெப் ஹனாபி தெரிவித்தார்.

கிழக்கு ஜாவா மாகாணத்தின் தலைநகரான சுரபயாவிலிருந்து பாண்டுங் நோக்கிப் பயணித்த துரங்கா விரைவு ரயில், சிகலெங்கா நிலையத்திலிருந்து படலராங் நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் மோதியதாக அவர் கூறினார்.

பயணிகள் ரயிலில் பயணம் செய்த 106 பேரும், துரங்காவில் பயணம் செய்த 54 பேரும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்