ஐரோப்பா

செக் குடியரசில் இரு ரயில்கள் மோதி விபத்து – ரயில் சேவை நிறுத்திவைப்பு!

செக் குடியரசில் (Czech Republic) எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று  மற்றொரு பயணிகள் ரயிலுடன் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

செஸ்கே புடெஜோவிஸ் ( Ceske Budejovice) நகருக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில்  பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில், 40 பேர் லேசான காயங்களுக்கு உள்ளானதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய மீட்பு சேவை தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த பகுதியூடான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 2 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!