இலங்கை செய்தி

திருகோணமலையில் இரு மாணவிகளை காணவில்லை

திருகோணமலையில் இரண்டு பாடசாலை மாணவிகள் ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே பாடசாலையில் கல்வி கற்கும் 15 மற்றும் 17 வயதுடைய இரு நண்பிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – அபயபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் கடந்த 18ஆம் திகதி காலை வேலைக்குச் செல்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

பின்னர் முச்சக்கர வண்டியில் திருகோணமலை – சிங்கபுர பகுதிக்கு வந்து தனது 15 வயது நண்பியை ஏற்றிக்கொண்டு அவரது சகோதரியை முன்பள்ளியில் இறக்கிவிட்டு கந்தளாய் பகுதிக்கு சென்றதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவர்கள் அங்கிருந்து  பேருந்தில் குருநாகல் வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரின் பெற்றோரும் திருகோணமலை தலைமையகப் பொலிஸாரிலும், உப்புவெளிப் பொலிஸாரிலும் முறைப்பாடு செய்தும் இதுவரை அவர்கள் தொடர்பில் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content