பிரான்ஸில் வீதியில் பயணித்த இருவருக்கு காட்டுப் பன்றியால் நேர்ந்த கதி

பிரான்ஸில் வீதியில் பயணித்த காருடன் காட்டுப் பன்றி ஒன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
Bordeaux நகரின் கிழக்கு பகுதியில் இச்சம்பவம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அதிகாலை 4 மணிக்கு வீதியில் விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றுள்ளனர்.
கார் ஒன்று வீதியில் இருந்து விலகி மரம் ஒன்றில் மோதியுள்ளது. அதில் பயணித்த 18 மற்றும் 19 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்து ஏற்பட்டமைக்கு திடீரென வீதியினை குறுக்கறுத்துச் சென்ற காட்டுப்பன்றிகளே காரணம் எனவும், காருடன் பன்றி ஒன்று திடீரென மோதியதில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 20 times, 1 visits today)