இந்தியா

கேரளாவில் நிபா கிருமித்தொற்றலா இருவர் மரணம்: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

நிபா கிருமித்தொற்றுக்கு இருவர் பலியானதைத் தொடர்ந்து கேரளாவின் சில பகுதிகளில் உச்சக்கட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.நிபா கிருமி மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்​கைகளை அந்த மாநில அரசு தீவிரப்​படுத்​தி​யுள்​ளது.

கேரளாவில் ஆண்​டு​தோறும் கோழிக்​கோடு, பாலக்​காடு, மலப்​புரம் உள்​ளிட்ட இடங்​களில் தொடர்ச்​சி​யாக நிபா கிருமிப் பாதிப்பு இருந்து வரு​கிறது.பாலக்​காடு மாவட்​டம் மன்​னார்​காடு அருகே குமரமபுத்​தூர் பகு​தியைச் சேர்ந்த 57 வயது நபர் ஒரு​வர் கடந்த சில நாள்களாக தீவிர காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்​டிருந்​தார்.தமது பகு​தி​யில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் அவருக்குக் காய்ச்​சல் குண​மாக​வில்​லை.

அவரது உடல்​நிலை மிக​வும் மோச​மானதையொட்டி மஞ்​சேரி​யில் உள்ள அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயி​ரிழந்​தார்.இதையடுத்து அவரது உடலின் திரவ மாதிரி​களை சேகரித்துப் பரிசோ​தித்​த​தில் நிபா கிருமி பாதிப்பால் அவர் இறந்​தது தெரிய​வந்​தது.

சில நாள்​களுக்கு முன்பு நிபா கிருமியால் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். தற்போது நிபா மரண எண்ணிக்கை இரண்டாகி உள்ளது.இதையடுத்து, மாநில சுகா​தா​ரத்​துறை நிபா பரவல் தடுப்பு நடவடிக்​கைகளை மலப்​புரம், பாலக்​காடு, பெரிந்​தல்​மன்​னா, கோழிக்​கோடு பகு​தி​களில் தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. இத்​தகவலை சுகா​தா​ர அமைச்​சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்​துள்​ளார்.

முதற்​கட்​ட​மாக, நிபா கிருமி பாதித்து இறந்த ஆடவரின் வீட்டைச் சுற்றி மூன்று கிலோமீட்​டர் சுற்றளவு கட்​டுப்​படுத்​தப்​பட்ட பகு​தி​யாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.அதனால் அங்​குள்ள பகு​திக்​குள் வெளியில் இருந்து நபர்​கள் வரவும் அங்​குள்ள மக்​கள் வெளியே செல்​ல​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.மேலும் அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் முகக்​கவசம், சமூக இடைவெளியைக் கடைப்​பிடிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

அடுத்தக்கட்டமாக, உயிரிழந்த இருவருடனும் கிருமித்தொற்று நோயாளிகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்த 609 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களிடம் கிருமிப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

(Visited 3 times, 3 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
Skip to content