கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் உட்பட இருவர் கைது

இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று இரவு (22) விமான நிலைய வருகை முனையத்தில் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, டுபாயில் இருந்து இலங்கை வந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் கொண்டு வந்த 10,000 சிகரெட்டுகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, டுபாயில் இருந்து வந்த விமானத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு சிகரெட்டுகளை கொண்டு வந்த பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)