இலங்கை செய்தி

கிளிநொச்சியில் பொமரேனியன் நாய்க்கு உரிமை கோரிய இருவர்!! நீதிமன்றம பிறப்பித்துள்ள உத்தரவு

கிளிநொச்சி பிரதேசத்தில் இரண்டு தரப்பினர் பொமரேனியன் நாயொன்றுக்கு உரிமை கோரியமையினால் குறித்த நாயின் மரபணு பரிசோதனைக்கு கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி – பரந்தன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது நாயைக் காணவில்லை என கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு, புகார் அளித்த புகார்தாரரின் வீட்டிற்கு சம்பந்தப்பட்ட நாய் வந்துள்ளது.

அதன் பின்னர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த மற்றுமொருவர் தனது நாய் வேறு வீட்டில் பலவந்தமாக அடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் இரு தரப்பினரையும் பொலிஸாருக்கு வரவழைத்து விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் நாயின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

கிளிநொச்சி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து குறித்த நாயை கொள்வனவு செய்ததாகவும், அந்த நாயின் தாய் தற்போதும் அந்த வீட்டில் இருப்பதாகவும் ஒரு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மைகளை பரிசீலித்த கிளிநொச்சி நீதவான், நாயின் உரிமையாளரைக் கண்டறிய மரபணு பரிசோதனையை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை