இலங்கை செய்தி

கராப்பிட்டிய வைத்தியசாலையின் இரு ஊழியர்கள் கைது

வைத்தியர் ஒருவரை தாக்கிய இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் கடமையாற்றும் விசேட வைத்தியரான கிரிஸாந்த பெரேராவை தாக்கிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் ஒருவர் காலி கொட்டவாகம பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் எனவும் மற்றையவர் அக்குரஸ்ஸ தியலபே பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சுகாதாரப் பணியாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற பணிப்புறக்கணிப்பில் புற்றுநோய் பிரிவின் ஊழியர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இளநிலை ஊழியர்கள் கலந்துகொண்டமை தொடர்பில் வைத்தியருக்கும் இளநிலை ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

இதேவேளை, ஊழியர்கள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்ட வைத்தியர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!