போலி கடவுச்சீட்டுக்களுடன் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இருவர் கைது!
போலி பாஸ்போர்ட்டுகளில் நாட்டிற்குள் நுழைய முயன்ற இரண்டு ஆப்கானிஸ்தான் பயணிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
போலி கஜகஸ்தான் பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்த 21 மற்றும் 23 வயதுடைய இருவர் குவைத்திலிருந்து வந்தவர்களாவர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் தங்கள் பாஸ்போர்ட்டுகளை சமர்ப்பித்த சந்தேக நபர்கள், அவர்களின் பயண ஆவணங்களை மேலும் ஆய்வு செய்வதற்காக எல்லை கண்காணிப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில் அவர்கள் போலி பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. அதே விமானம் மூலம் அவர்களை குவைத்துக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
(Visited 44 times, 1 visits today)





