இலங்கையில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் – தவிக்கும் குடும்பத்தினர்

அரநாயக்க, பிரதேசத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் குடும்பம் ஒன்று போராடி வருகின்றது.
அவர்கள் உடல்களை பிரிக்கவும் அரநாயக்க பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியினர் உதவிகேட்டுள்ளனர்.
அரநாயக்க, உடகம கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது மூன்று வயதாகின்றது.
பிறந்ததிலிருந்தே இடுப்பு பகுதியில் ஒட்டிப் பிறந்துள்ள இவர்களைப் பராமரிக்கவும், சரியான ஊட்டச்சத்தை வழங்கவும் இப்பெற்றோருக்கு போதிய வருமானமில்லையென தெரிவிக்கின்றனர்.
இரண்டு குழந்தைகளின் இந்த நிலைமையால், பெற்றோர் தற்போது மிகவும் அவநம்பிக்கையான சூழ்நிலையில் உள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)