மத்திய கிழக்கு

பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்பாக 97 மாணவர்களைக் கைது செய்த துருக்கிய காவல்துறை

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் போகாசிகி பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற இஸ்லாமிய போதகர் மாநாட்டுக்கு மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதன்தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 97 மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

இஸ்லாமிய போதகர் நுரெடின் யில்டிஸ் என்பவரின் மாநாட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போதகர், இளம் வயது திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டவர்.

வளாகத்தில் காவல்துறையின் தடுப்புகளை உடைக்க முயற்சி செய்த மொத்தம் 97 மாணவர்கள் தடுத்துவைக்கப்பட்டனர் என்று ஆளுநர் தாவுத் குல் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தார்.

மாணவர்களுடன் ஏற்பட்ட கைகலப்பில் 13 காவல்படை அதிகாரிகள் காயம் அடைந்ததாகவும் அவர் சொன்னார்.

அதிபர் தயிப் எர்துகனின் அரசியல் எதிரியான இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமோக்லு தடுத்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து துருக்கியில் அண்மைய மாதங்களாக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.