உலகம்

பேஸ்புக்கில் ஜனாதிபதியை அவமதித்த துனிசிய நாட்டவருக்கு மரண தண்டனை

துனிசிய நாட்டு ஜனாதிபதி கைஸ் சயீதை அவமதித்து, அரசின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டதற்காக துனிசிய நீதிமன்றம் நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

51 வயதான துனிசிய நாட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசை கவிழ்க்க முயன்றது, ஜனாதிபதியை அவமதித்தது மற்றும் ஒன்லைனில் தவறான தகவல்களைப் பரப்பியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக இந்த வார தொடக்கத்தில் சபர் சௌசென் என்பவர் குற்றவாளி என  தீர்ப்பளிக்கப்பட்டது.

அதற்கமைய, துனிசியாவின் தண்டனைச் சட்டம் மற்றும் சைபர் கிரைம் சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிபதிகள், அவரது பதிவுகள் வன்முறை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியதாகத் தீர்மானித்துள்ளனர்.

சமூக ஊடக நடவடிக்கைகளுக்காக துனிசியாவில் இதுபோன்ற தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

துனிசியாவில் மரண தண்டனை சட்டப்பூர்வமானது என்றாலும், 1991 ஆம் ஆண்டு ஒரு கொலை குற்றச்சாட்டிற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்