ஆசியா

ஜப்பானை தாக்கும் சுனாமி : வீழ்ச்சி அடைந்த சுற்றுலாத்துறை!

ஜப்பானிற்கு  சுற்றுலா மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிய நாடுகளிலிருந்து முன்பதிவுகள் கடந்த ஆண்டை விட 50 சதவீதம் வரை குறைந்துள்ளன.

ஒரு காமிக் புத்தகத்தில் கூறப்பட்ட பேரழிவு கணிப்புகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

ரியோ டாட்சுகி 1999 இல் வெளியிட்ட காமிக்ஸில், ஒரு பெரிய பூகம்பம் ஜப்பானை மூழ்கடிக்கும் ஏராளமான சுனாமி அலைகளைத் தூண்டுகிறது எனவும் இது 2025 ஆம் ஆண்டு ஜூலையில்  இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஃபார்வர்ட்கீஸ் தரவுகளின் ப்ளூம்பெர்க் புலனாய்வு பகுப்பாய்வின்படி, தென் கொரியாவின் தைவானில் இருந்து விமான முன்பதிவுகள் ஏப்ரல் முதல் குறைந்துள்ளன, ஹாங்காங் விமானங்கள் கடந்த ஆண்டை விட சராசரியாக 50 சதவீதம் குறைந்துள்ளன.

ஆசிய நிதி மையத்திலிருந்து ஜூன் மாத இறுதியில் இருந்து ஜூலை மாத தொடக்கத்தில் வாராந்திர வருகை முன்பதிவுகளும் 80 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளதாக பகுப்பாய்வு காட்டுகிறது.

இதுபோன்ற போதிலும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் தற்போதைய அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி பூகம்பங்களின் சரியான நேரங்களையும் வலிமையையும் கணிக்க முடியாது என்று விஞ்ஞானிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!