இலங்கை

புதையல் தோண்டிய இருவர்? பொலிஸார் தீவிர விசாரணை

புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பலகாமம் 96 ஆம் கட்டை பகுதியிலுள்ள வீட்டில் கிணறு தோண்டுவதைப் போன்று புதையல் தோண்டிக் கொண்டிருந்த வேளையில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

எஸ் ஐ எஸ் என்று அழைக்கப்படும் அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கந்தளாய் பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கல் துளைக்கும் இயந்திரத்துடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முள்ளிப்பொத்தானை- சாலியபுர -பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 60 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கல் துளைக்கும் இயந்திரம் மற்றும் சில ஆயுதப் பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்றில் நாளை (13) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!