டிரம்ப் எடுத்த நடவடிக்கை – போர் முடிவுக்கு வரும் என நம்பும் ஐரோப்பிய தலைவர்கள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஐரோப்பிய தலைவர்களுக்கு உக்ரைனில் போர்நிறுத்தம் குறித்த நம்பிக்கையைப் புதுப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க அமெரிக்க மற்றும் ரஷ்ய தலைவர்கள் நாளை அலாஸ்காவில் சந்திக்க உள்ளனர்.
அதற்கு முன்னர் நடைபெற்ற ஐரோப்பிய தலைவர்களின் சந்திப்பின் போது, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதே ரஷ்ய ஜனாதிபதியுடன் தனது வரவிருக்கும் சந்திப்பின் நோக்கம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.
அது தொடர்பான எந்தவொரு பிராந்திய பிரச்சினைகளும் உக்ரைன் ஜனாதிபதியின் தலையீட்டின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது உக்ரைன் தொடர்பான தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த ஐரோப்பிய தலைவர்கள் வாய்ப்பு பெற்றதாகவும் பிரெஞ்சு அதிபர் கூறினார்.
உக்ரைனில் போரை நிறுத்தாவிட்டால் ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விவாதத்தில் கூறியுள்ளார்.
ஒன்லைனில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து மற்றும் போலந்து நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்க மற்றும் ரஷ்ய தலைவர்களின் சந்திப்புக்கு முன்னர் இதுபோன்ற ஒரு விவாதத்தை நடத்துவதற்கான காரணம், உக்ரைன் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது உக்ரைன் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட விவாதத்திலிருந்து விலக்கப்படுவது குறித்து ஐரோப்பிய தலைவர்கள் கவலை கொண்டிருந்ததே ஆகும்.