7 போர்களை நிறுத்திய போதிலும் ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தை தீர்க்க முடியவில்லை – டிரம்ப் கவலை

உலகில் 7 போர்களை நிறுத்திய தனக்கு, ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கவலை வெளியிட்டுள்ளார்.
புட்டினும், ஜெலன்ஸ்கியும் இணைந்து செயல்படுவார்களா என்று நாங்கள் பார்த்து வருகிறோம். வெளிப்படையாக காரணங்களுக்காக அவர்கள் நன்றாக பழகுவது இல்லை என்றார்.
இருவருடனும் நானும் இருக்க வேண்டுமா இல்லையா என்பது பின்னர் பார்ப்போம்.
இருவரும் சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து சண்டையிடுகிறார்கள். மக்களை கொல்கின்றனர். இது மிகவும் முட்டாள்தனமானது.
நான் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன். இதையும் (ரஷ்யா-உக்ரைன் போர்) நிறுத்த விரும்புகிறேன். ஆனால் அது மிகவும் கடினமானதாக மாறி வருகிறது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.
(Visited 5 times, 5 visits today)