ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் தேவையில்லை என அறிவித்த டிரம்ப்

ஈரானுடன் அணுச்சக்தி ஒப்பந்தம் இனி தேவையில்லை என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுச்சக்தி ஆற்றல் அழிக்கப்பட்டுள்ளது என உறுதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ மாநாட்டில் பேசியபோது ஈரானின் அணுச்சக்தித் தளங்கள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
ஈரானின் அணுச்சக்தித் தளங்கள்மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல்களையொட்டிய தற்காப்பு அமைச்சின் அறிக்கை கசிந்தது.
அதனை விமர்சித்தவர்களை டிரம்ப் சாடினார்.
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் இன்று நடத்தவிருக்கும் செய்தியாளர்க் கூட்டம் சுவாரஸ்யமாகவும் மறுக்க முடியாத ஒன்றாகவும் இருக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் டிரம்ப் தெரிவித்தார்.
(Visited 8 times, 8 visits today)