போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் அபார நம்பிக்கையில் ட்ரம்ப்!
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் “பெரிய முன்னேற்றம்” ஏற்படக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா பரிந்துரைத்துள்ள 28 அம்ச கோரிக்கைகள் குறித்து ஐரோப்பிய தலைவர்கள் விவாதித்து வருகின்றனர்.
உக்ரைனின் நாடாளுமன்ற சபாநாயகர் ருஸ்லான் ஸ்டீபன்சுக் (Ruslan Stefanchuk) ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை முறையாக அங்கீகரிப்பது மற்றும் இராணுவத் திறன்களுக்கான வரம்புகளைத் தவிர்ப்பது உள்ளிட்ட விடயங்களை பரிசீலிப்பது தொடர்பில் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் முன்மொழியப்பட்ட சலுகைகள் ரஷ்ய சார்புடையதாக இருப்பதாக விமர்சிக்கப்பட்ட போதிலும், இந்த ஒப்பந்தம் அமைதி திட்டத்தை நோக்கி நகர்வதற்கான முதற்படி என அமெரிக்க அதிகாரிகள் கூறிவருகின்றமை குறிப்படத்தக்கது.





