ஐரோப்பா

வாரத்திற்கு 5000 பேரை கொல்லும் இரத்தக்களரி போரை நிறுத்துமாறு ட்ரம்ப் அழைப்பு!

துருக்கியின் இஸ்தான்புல்லில் கடந்த வாரம் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உக்ரைன் மீதான மாஸ்கோவின் 3 ஆண்டுகால படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியை வெள்ளை மாளிகை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாரத்திற்கு சராசரியாக 5,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய மற்றும் உக்ரேனிய வீரர்களைக் கொல்லும் ‘இரத்தக்களரியை’ நிறுத்துவதற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்தான்புல்லில் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் குறித்த டிரம்பின் நம்பிக்கைகள் தகர்க்கப்பட்ட பின்னர், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பு இருந்தபோதிலும் புடின் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.

புடினும் கலந்து கொள்ள மாட்டார் என்பது தெளிவாகத் தெரிந்ததும், டிரம்ப் அமைதி முயற்சி குறித்து செய்தியாளர்களிடம், “புடினும் நானும் ஒன்று சேரும் வரை எதுவும் நடக்கப்போவதில்லை, என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!