வட அமெரிக்கா

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வேலை செய்பவர்களை குறிவைத்து பயணம் மற்றும் பொருளியல் தடை விதித்துள்ளார்.

அமெரிக்க குடிமக்கள், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்பவர்களை அடக்கும்விதமாக டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமது முதல் தவணை பதவி காலத்திலேயே டிரம்ப் இவ்வாறு செய்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அமெரிக்காவுக்கு வருகை புரிந்த நேரத்தில் டிரப்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யார் யார் மீது தடைகள் விதிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

காஸா போர் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் தேடுதல் பட்டியலில் இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு, முன்னாள் இஸ்ரேலிய ராணுவ அமைச்சர், ஹமாஸ் படைத் தலைவர் உள்ளிட்டவர்கள் உள்ளனர்.

 

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்