அருணாச்சலப் பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த லாரி – 18 தொழிலாளர்கள் மரணம்
அஸ்ஸாமின்(Assam) தின்சுகியா(Tinsukia) மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் அருணாச்சலப் பிரதேசத்தில்(Arunachal Pradesh) உள்ள ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சீன(China ) எல்லைக்கு அருகிலுள்ள ஹயுலியாங்-சக்லகாம்(Huliang-Chaklagam) சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கட்டுமானப் பணிக்கு தினக்கூலி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரியில் மொத்தம் 22 பேர் பயணம் செய்ததாகவும் வாகனம் குறைந்தது 1,000 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து குறைந்தது 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணி இன்னும் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்கள் அனைவரும் அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கெலாபுகுரி(Kelabukuri) தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் ஒரே ஒரு தொழிலாளி உயிர் பிழைத்ததாக அறியப்படுகிறது. குறித்த நபர் புத்தேஸ்வர் தீப்(Budheshwar Deep) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.




