மகாராஷ்டிராவில் லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து – 8 பேர் மரணம்

மகாராஷ்டிராவின் நந்தூர்பார் (Nandurbar) மாவட்டத்தில் வேகமாக வந்த லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒரு யாத்திரைத் தலத்திலிருந்து சுமார் 40 பேருடன் வந்த லாரி அதிக வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
லாரி ஓட்டுநர் உட்பட காயமடைந்தவர்கள் நந்தூர்பாரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் கணேஷ் பில், பூஷண் கோசாவி, பவன் மிஸ்தாரி, பாபு தங்கர், சேதன் பாட்டீல், யோகேஷ் தாக்கரே, ராகுல் மிஸ்தாரி மற்றும் ஹிராலால் பில் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிக வேகம் மற்றும் கவனக்குறைவு குற்றச்சாட்டில் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.